#IPL2022: டாஸ் வென்ற ராஜஸ்தான்.. பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 63-வது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஜேம்ஸ் நீஷம், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஓபேட் மெக்காய்.

Leave a Comment