#IPL2022: புள்ளிப்பட்டியலில் 2-ம் இடம்.. ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சந்தித்தது. மேலும் இந்த வெற்றின்மூலம் புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்ற 63-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டோரா வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – கே.எல்.ராகுல் களமிறங்கினார்கள்.

இதில் டி காக் 7 ரன்கள் அடித்து வெளியேற, அவரையடுத்து கே.எல்.ராகுல் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்கள். பின்னர் களமிறங்கிய பதோனி டக் அவுட் ஆகா, அவரைதொடர்ந்து 2 ரன்கள் எடுத்து க்ருனால் பாண்டியா தனது விக்கெட்டை இழந்தார். சிறப்பாக ஆடிவந்த தீபக் ஹூடா அரைசதம் விளாசி 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த வெற்றின்மூலம் ராஜஸ்தான் அணி, புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது.

Leave a Comment