தோனி குறித்து புகழ்ந்து கூறிய ஆர்.பி.சிங்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த வகையில் தோனியின் ஓய்வு குறித்து தோனியின் நெருங்கிய நண்பர் மற்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் கூறுகையில் தோனி மிகவும் அமைதியானவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபப்படாமல் அனைத்து வீரர்களிடம் சகஜமாக பழகுவார் அணியிலுள்ள சில வீரர்களுக்கு தனது கருத்துக்களை புரிந்து கொள்ளுமாறு கூறி வெற்றியை எப்படி பெற வேண்டும் என்பதை சுலபமாக வீரர்கள் அனைவர்க்கும் தெளிவாக புரிய வைப்பார்.

மேலும் நான் தோனியுடன் எங்களின் செல்போன் அழைப்புகளை ஏற்பதில்லை என நான் ஒருமுறை அவரிடம் கேட்டேன். அதற்கு என்னிடமும் முனாஃப் படேலிடமும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற பின்பு முழுசாக ஒரு ரிங் நிற்பதற்குள், இல்லை இல்லை அரை ரிங்கின்போதே செல்போன் அழைப்பை எடுத்துவிடுவேன் என்று கூறியதாக கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.