வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!பெங்களூரு அணி வெற்றி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற  54-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் –சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.

இந்த போட்டியானது, பெங்களூருரில் உள்ள எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடை பெற்றது.இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சில் சுந்தர் 3 விக்கெட்  கைப்பற்றினார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது.

 

 

 

பெங்களூரு அணி தொடக்க முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அந்த அணியில் முக்கிய வீரர்கள் ஜொலிக்க தவறினார்கள்.பின்னர் வந்த ஹெட்மியர்-குர்கீரத் ஜோடி சிறப்பாக விளையாடியது.சிறப்பாக விளையாடிய இருவரும் ஒரு கட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.ஹெட்மியர் 75,குர்கீரத் 65 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியாக பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் அடித்தது.சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் அணியின் பந்து வீச்சில் கலீல் 3 விக்கெட்  கைப்பற்றினார்.தோல்வி மூலம் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து.

Leave a Comment