#IPL2020 : பெங்களூர் அணி வெற்றிபெற 178 ரன்கள் இலக்கு !

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிவருகின்றது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ்  ,உத்தப்பா ஆகியோர் களமிறங்கினார்கள். இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட  ஸ்டோக்ஸ் , பெங்களூர் அணியின்   மோரிஸ் பந்துவீச்சில் 15 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.பின்பு சிறப்பாக விளையாடிய உத்தப்பா 41 ரன்கள் அடித்து வெளியேறினார்.இவரைத் தொடர்ந்து சம்சன் 9 ரன்கள் ,பட்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்மித் 57 ரன்களில் வெளியேறினார்.

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து  177 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் திவாட்டியா 19* ரன்களுடன் இருந்தார். ஆர்ச்சர்  கடைசி பந்தில் 2 ரன்களில் அவுட்டாகினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில்மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களமிறங்க உள்ளது.