கேல் ரத்னா விருது வாங்கியது குறித்து ஹிட் மேன்..!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவிற்கு மத்திய அரசின் சார்பில் அன்மையில் கேஎல் ரத்னா விருது வழங்கப்பட்டது .இதற்காக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ரோஹித் சர்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் வீடியோ ஒன்று பேசியுள்ளார் அந்த வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது, அந்த வீடியோவில் கேல் ரத்னா விருதுக்கு என்னை தேர்வு செய்தது விளையாட்டு துறைஅமைச்சகத்துக்கு மிகவும் நன்றி.

தோனி, சச்சின், கோலி ஆகியோருடன் எனது பெயரும் உள்ளது இதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நாட்டிற்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் போது ஒரு விளையாட்டு வீரரை மேலும் ஊக்கப்படுத்தும் எனவே நாட்டுக்காக நான் சிறப்பாக விளையாடுவேன் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவேன் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.