புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து.!

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தி அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின் பிரிவு 33-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. வரி உயர்வை எதிர்த்து பாமக நிர்வாகி தேவமணி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்