தனது ஓய்வு குறித்து டேவிட் வார்னரிடம் கூறிய ‘ஹிட் மேன்’ ரோகித் சார்மா !

தனது ஓய்வு குறித்து டேவிட் வார்னரிடம் கூறிய ‘ஹிட் மேன்’ ரோகித் சார்மா. 

கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னரும் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் பேஸ்புக்கில் உரையாடியுள்ளனர். அப்போது ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்தான தகவலை கூறியுள்ளார்.

ரோகித் சர்மா “நாங்கள் இந்தியாவில் வளரும்போது, கிரிக்கெட் மட்டுமே எங்களது வாழ்க்கை என்று கூறுவோம். நீங்கள் 38-39 ஆக இருக்கும்போது நீங்கள் கிரிக்கெட் முடிக்கிறீர்கள். நீங்கள் எப்போது முடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அதற்கு முன் முடிப்பேன்” என்றார். 

author avatar
Vidhusan