வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான 87 வயதுடைய மன்மோகன் சிங்கிற்கு நெஞ்சுவலி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து மன்மோகன் சிங்கிற்கு காய்ச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. பின்னர் அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்பிடுவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்கிற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.