இந்தியா-இங்கிலாந்து இடையே மீண்டும் விமான சேவை ! மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருவதால், இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் விமான சேவைகளை நிறுத்தியது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில்  இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என்றும் ஒவ்வொரு வாரமும் 30 விமானங்கள் இயங்கும் என்றும் வருகின்ற 22-ஆம் தேதி  இந்த அட்டவணை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளார்.8ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2 நாள் முன்னதாகவே விமானங்களை இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.