இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை – கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்கு எந்த பயனுமில்லை என்றுகார்திக் சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள குழுவால் எந்த பலனும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் நியமிக்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரமில்லாததால் யாருக்கும் பொறுப்பு இருக்காது. 32 துணை தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர் என யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்