நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது …!அமைச்சர் உதயகுமார்

நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து நாகையில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு  செய்தார்.அதன்பின்  அமைச்சர் உதயகுமார் கூறுகையில், முதற்கட்டமாக மின்விநியோகத்தை சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. புயல் சேத கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, கள நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு தெரிவித்து வருகிறோம் .மீட்பு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றும்  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment