#RCBvCSK: வெற்றி பெறப்போவது யார்..? டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு..!

ஷார்ஜாவில் மைதானத்தில் நடைபெறும் 35வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு.

இன்று ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இதனிடையே, ஷார்ஜாவில் புழுதிப்புயல் வீசியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியின் டாஸ் சற்று தாமதமாக போடப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

சென்னை அணி வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (c/wk), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 பெங்களூரு அணி வீரர்கள்:

விராட் கோலி (c), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டி வில்லியர்ஸ், டிம் டேவிட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தாவிடம் ஏற்பட்ட படுதோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப் பாதையில் திரும்ப வர வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூர் அணி விளையாடுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்தை பிடிக்க சென்னை அணி விளையாடவுள்ளது. இதனால், இன்றைய போட்டி யார் வெற்றி பெறுவார்கள் என்ற  பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

author avatar
murugan