ராஷ்மிகாவை அழ வைத்து படம் பிடித்த இயக்குனர்! காரணம் இது தானாம்

பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ராஷ்மிகா. “கீதா கோவிந்தம்” திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சமீபத்தில் இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக  நடிக்க மறுத்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். ஒருநாள் படப்பிடிப்பிற்கு இவர் சிறிது நேரம் தாமதமாக வந்துள்ளார்.

அதனால் படப்பிடிப்பில் யாரும் அவரிடம் பேசக்கூடாது என கூறிவிட்டார். படப்பிடிப்பில் யாரிடமும்  பேசாததால் ராஷ்மிகா ஒரு கட்டத்தில்  கண்ணீர் விட்டு அழுதே விட்டார்.

பிறகு இயக்குனர் இன்று சோகமான காட்சிகளை எடுக்க உள்ளதால் அதற்காக  தான் இப்படி இப்படி செய்தோம்  என கூறியுள்ளார்.

author avatar
murugan

Leave a Comment