நான் ரொம்ப அழகா இருக்கன்னு சொல்லி பட வாய்ப்பு தரல! ராஷி கண்ணா வேதனை!

Raashii Khanna தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கா மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராஷி கண்ணா. இவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி  தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகும் படங்களிலும் நடித்து இருந்தார். தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் பேசியுள்ளார்.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

இது குறித்து பேசிய அவர் ” தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களை மில்க் பியூட்டி, என்று அழைப்பார்கள்.அப்படி அழைக்கவேண்டும் என்றால், கிளாமராகவும் இருக்கவேண்டும், அப்படி இல்லை என்றால் நன்றாக நடிக்கவேண்டும். இது ரெண்டுமே ஒரே ஒரு ஆள் கிட்ட இருக்க என்னை பொறுத்தவரை வாய்க்கு இல்லை என்று தான் கூறுவேன்.

READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!

நான் அழகாக இருப்பதாக கூறி பல பட வாய்ப்புகளை நிராகரித்து உள்ளனர் என்று கூறி இருந்தார். இவர் பேசியது ஒரு பக்கம் பெரிய அளவில் வைரலானது.  இதனை பார்த்த பலரும் ரொம்ப சீன் வேண்டாம் என்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். இதைப்பார்த்த ராஷி கண்ணா  பயத்தில் பேச்சையும் மாற்றி இருக்கிறார்.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

மற்றோரு பேட்டியில் பேசிய ராஷி கண்ணா  ” அதாவது நான் சொன்ன விஷயத்த  தவறாக புரிந்து கொண்ட பலரும் நான் பேசியதை வைத்து பலவிதமாக பேசிவருகிறார்கள். இப்படி தவறான செய்திகளைப் பரப்புவது முதன் முதலில் நிறுத்துங்கள். பல மொழிகளில் உருவாகும் படங்களில்  நடித்து இருக்கிறேன். எல்லா மொழிகளில் உருவாகும் படங்களின் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது” எனவும் ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ராஷி கண்ணா  தற்போது அரண்மனை 4 திரைபடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment