தாவனுக்கு பதிலாக களமிறங்குவாரா ரிஷாப் பான்ட்!

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இடது கை பெருவிரலில் பந்து அடித்ததில் காயம் அடைந்தார்.
இந்நிலையில் ஷிகர் தவான் அடுத்த 3 போட்டிகளில் விளையாட முடியாது நிலையில் உள்ளார்.ஆனால் அவர் உலக கோப்பை போட்டியில் இருந்து இன்னும் விலகவில்லை. அவரது காயம் எவ்வளவு நாள்களில் குணமடைய என்பதை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என இந்திய அணி நிர்வாகம் கூறியுள்ளது.
தவான் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷாப் பான்ட் இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்று உள்ளார். ஆனால் அவர் மாற்று வீரராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

author avatar
murugan