ராஜஸ்தான் ராயல்ஸ் 2021 – இல் இருந்ததை விட 5 மடங்கு சிறப்பாக உள்ளது – கிரேம் ஸ்வான்!

ஐபிஎல் 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 மடங்கு சிறப்பாக உள்ளது என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 15 வது சீசன் ஐபிஎல் போட்டியில் இதுவரை 24-வது லீக் போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் அவர்கள் கூறுகையில், ஐபிஎல் 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 மடங்கு சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஐபிஎல் 2022 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Rebekal