முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்- ஹெச்.ராஜா

கமல்ஹாசன் பேசியதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.இவரது இந்த கருத்து  கடும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கமலஹாசனை அடையாளம் காண்போம். பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு ரயிலில் இந்து உடல்களை ஜின்னா 1947 ஆகஸ்டு 15 அன்றே அனுப்பி வைத்ததும் நவகாளி சம்பவங்களும் இந்த ஜின்னாவின் பேரனுக்கு எப்படி நினைவிருக்கும். முஸ்லிம் ஓட்டுக்காக இப்படியா? வெட்கம் என்றும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம் ஆகும்.கமல்ஹாசன் முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்காத கோழை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

Leave a Comment