நாளை ரயில்வே முன்பதிவு மையங்கள் இயங்காது..!

நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு இயங்காது

முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு இயங்காது. டிக்கெட் முன்பதிவு மற்றும் டிக்கெட் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. ரயில்களில் அவசரமாக பயணம் செய்ய நடப்பு முன்பதிவு கவுண்டர்கள் வழக்கம்போல இயங்கும் என ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 18 ஆயிரத்து மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan