வெங்காயம் விளைவது எப்படி என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது – சிவராஜ் சிங் சவுகான்

வெங்காயம் விளைவது எப்படி என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது என்று மத்திய பிரதேச முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மூன்று நாட்கள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டார்.

இந்த பேரணியில் ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தி இருந்தார். ராகுல் டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை  பயன்படுத்தியது குறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ராகுல்காந்தி கூறுகையில் , என் நலம் விரும்பி யாரோ ஒருவர் டிராக்டரில் சோபாவை வைத்துள்ளார். ஆனால், பிரதமரின் பயன்பாட்டுக்காக ரூ.8,000 கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது. அதில், சோபா மட்டுமல்லாமல், சொகுசு படுக்கைகளே உள்ளது.அதை ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில்  மத்திய பிரதேச முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ராகுல் காந்தி  சோபாவில் அமர்ந்து பயணம் செய்கிறார்.இவை அனைத்தும் நாடகமே. ராகுல் காந்திக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது.ராகுல் காந்திக்கு வெங்காயம் மண்ணுக்குள் விளையுமா அல்லது நிலத்துக்கு மேலே விளையுமா என்று கூட தெரியாது என்று தெரிவித்துள்ளார்.