ராகுல்காந்தி கோமாளி போல செயல்படுகிறார் – சி.டி.ரவி

வாக்காளர்களை கவருவதற்காக ராகுல் காந்தி கோமாளி போல செயல்படுகிறார் என சி.டி.ரவி விமர்சித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கலந்து கொண்ட பின், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வரவேற்பு உள்ளது.  அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் கலாச்சாரத்தை பாஜக தான் பாதுகாக்கிறது. அதிமுக ஜனநாயகம் கொண்ட  கட்சி, ஆனால் திமுகவில் ஜனநாயகம் இல்லை. குடும்ப அரசியலை செய்து வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், வாக்காளர்களை கவருவதற்காக ராகுல் காந்தி கோமாளி போல செயல்படுகிறார் என்றும் ராகுல்காந்தியை விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.