ரிஷப் பண்டுக்கு இடம்., ரஹானே பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார் – விராட் கோலி பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நாளை தொடங்கி  பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் குஜராத், அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட சென்னை வந்துள்ள இந்திய அணி தனிமைப்படுத்துதலை முடித்து, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவார். ரஹானே பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார். நானும், ரஹானேவும் ஒருவரை ஒருவர் மதிக்கின்றோம். அணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டுமே எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அகமதாபாத்தில் நடைபெறும் 3,4வது டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்