நானும் கிரிக்கெட் பார்க்கும் போது பயத்தில் இதை செய்துள்ளேன்… அஸ்வின் ஓபன் டாக்…

கொஞ்சம் பயமுறுத்துவது போல் போட்டி சென்றால் டிவியை அனைத்து விடுவேன். -இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்  அஸ்வின் கிரிக்கெட் போட்டியை தாண்டி , தனக்கென தனி யூ-டியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் தனது கிரிக்கெட் சம்பந்தமான கருத்துக்களை பதிவிட்டு வருவார்.

அவர் அண்மையில், ஓர் கருத்தை பதிவிட்டுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் எப்போதும் எனக்கு பிடித்தது ஏற்ற இறக்கங்கள் தான். அது தான் ஆட்டத்தின் சுவாரஸ்யம். மக்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி கிரிக்கெட் ஆழமாக எடுத்து கொள்கின்றனர். நானும் கூட, ஒரு கொஞ்சம் பயமுறுத்துவது போல் மேட்ச் சென்றால் டிவியை அனைத்து விடுவேன்.’ என மிக வெளிப்படியாக பேசியிருந்தார்.

தற்போது அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவ்வப்போது ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறார். டி20 போட்டிகளில் விளையாடி மாதங்கள் உருண்டோடிவிட்டன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment