அதிக பேனர்கள் வைப்பதால் கட்சியின் பலத்தை காட்ட முடியாது-திருநாவுக்கரசர்

அதிக பேனர்கள் வைப்பதால் கட்சியின் பலத்தை காட்ட முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பேனரில் தலைவர்கள் உயிர்வாழ முடியாது. அதிக பேனர்கள் வைப்பதால் கட்சியின் பலத்தை காட்ட முடியாது.பேனர்கள் வைப்பதற்கு தமிழக அரசு சட்டம் இயற்றி, முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும்.

ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமெனில் அந்த தகுதி தமிழுக்கு மட்டுமே உள்ளது. தேர்வுகள் என்பது மாணவர்களை மேம்படுத்த மட்டுமே இருக்க வேண்டும். பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. ஒரே நாடு ஒரே மொழி என்று கூறி இந்தியாவை பிளவுப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.