புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இதனையடுத்து புதுச்சேரி சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வானார்.

இந்த நிலையில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.  புதுச்சேரி  சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை பேரவை செயலாளர் வின்சென்ட்  ராயிடம்  அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் அளித்தார்கள்.