புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு.!

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தமிழக்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திறக்கப்பட்டது. அதுவும், கிழமைக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுபான பிரியர்கள் மதுக்கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து, மது வாங்கி செல்கின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தை தோடர்ந்து புதுச்சேரியில் மதுகக்கடைகளை நாளை முதல் திறக்கலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளை முதல் திறக்கப்படும் மதுக்கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்