புதுச்சேரி விவகாரம்:ஹெல்மெட் கட்டாயம் என்று கூறுவது தவறா!!!துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி விவகாரத்தில்  மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறானது என்று  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில்,நியாயவிலைக்கடை பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு தேதி குறித்து கடிதம் அனுப்பிவிட்டோம்.ஹெல்மெட் கட்டாயம் என்று கூறுவது தவறா…எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.முதல்வர் தர்ணாவில் ஈடுபடுவது முறையான செயலா? ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தவறா? என்று  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment