புரோ கபடி லீக்:பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது….!மண்ணை கவ்வியது குஜராத் அணி …!

புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

புரோ கபடி 6-வது சீசன் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தன. இறுதிப் போட்டிக்கு பெங்களூரு புல்ஸ் அணி, குஜராத் பார்ச்சூன் கியண்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இறுதிப் போட்டி இன்று இரவு  நடைபெற்றது.

இந்நிலையில்  புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 38-33 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி.

இதில் தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்த தமிழ் தலைவாஸ் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது .

Leave a Comment