ரஷ்ய அதிபருடன் தொலைபேசி வாயிலாக பேசுகிறார் பிரதமர் மோடி…!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேசவுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய அரசு அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையில் இந்திய மாணவர்கள் இரண்டு இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேசவுள்ளார். உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை மீட்பதற்காக பேசவுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.