அருணாச்சல பிரதேசத்தில், புதிய பசுமை விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி.
அருணாச்சல பிரதேசத்தில், அம்மாநில தலைநகர் இடாநகரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மறுசூழற்சிப் பயன்பாடு என முற்றிலும் பசுமை முறையில் புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலத்தை பிரதமர் மோடி அவர்கள் தற்போது திறந்து வைத்துள்ளார். மேலும், ரூ.8,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.