அனைத்து மாநில ஆளுநர்களுடன், குடியரசுத்தலைவர் ஆலோசனை

அனைத்து மாநில ஆளுநர்களுடன், குடியரசுத்தலைவர் ஆலோசனை  மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்தக்கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்றுள்ளார்.

நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று  மாநில ஆளுநர்கள் உடன் காணொலி காட்சி மூலமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை  மேற்கொண்டு வருகிறார்.