மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிரதாப் சிங் பஜ்வா..!

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால்  மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார்.

எம்.எல்.ஏ:

சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா:

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார். ராஜ்யசபா தலைவர் எம்.வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், பஞ்சாப் மாநிலத்தின் 16வது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், ராஜினாமா செய்வதாக பிரதாப் சிங் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

அவர் தனது ராஜினாமாவில் பிரதாப் சிங் கூறுகையில்,  கடந்த 6 ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பெருமை. சட்டசபைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.GO

 

 

author avatar
murugan