சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா!

மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் சிங் படேலுக்கு(வயது 60) கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மக்கள், அரசியல் தலைவர்கள் என்று அடுத்தடுத்த தொற்றால் அரசியல் தளமும் ஆட்டம் கண்டுள்ளது.அவ்வாறு முதலமைச்சர்கள், மத்திய மந்திரிகள், கவர்னர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள்  பட்டியல்  நீண்டு கொண்டு செல்கிறது.

அந்த வகையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்காரி, ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், கைலாஷ் சவுத்ரி, அர்ஜூன்ராம் மேக்வால், கஜேந்திர ஷெகாவத், சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர்க்கு கொரோனாத் தொற்றுக்கு ஆளான அரசியல் தலைவர்கள் ஆவர்.இந்நிலையில்
இந்த வரிசையில் இப்போது மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் சிங் படேலும் (வயது 60) சேர்ந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், தாமோ தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரகலாத் சிங் படேலுக்கு  நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இது குறித்து அவர் தனது  டுவிட்டரில் பக்கத்தில் கூறியுள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை செவ்வாய்க்கிழமையன்று சந்தித்தவர்கள் எல்லாம் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
kavitha