டெல்லியில் மேலும் 4,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 4,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,34,701 ஆக உயர்ந்துள்ளது. இன்று 60,014 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மொத்தமாக அம்மாநிலத்தில் 23,69,592 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,877 ஆக உள்ளது. ஒரே நாளில் 3,587 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,98,103 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி 31,721 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.