ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை 11.21 மணியளவில் ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு இடங்களில் உணரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்காக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.