இலங்கையில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல்.. ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.!

இலங்கையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்க காரணமாக, கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

வாக்குச் சாவடிகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, வழக்கத்தை விட இம்முறை தேர்தல் செலவினங்கள் 50 சதவீதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.