பொன்னியின் செல்வன்.! டப்பிங்கை முடித்தனர் கார்த்தி & ஜெயம் ரவி.! விக்ரமுக்காக படக்குழு காத்திருப்பு.!

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டன. கார்த்தி, ஜெயம் ரவி முடித்துவிட்ட நிலையில் அடுத்து விக்ரம் தனது டப்பிங் பணிகளை ஆரம்பிக்க உள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

2 பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் 2 பாக ஷூட்டிங்கும் மொத்தமாக முடிந்துவிட்டது. தற்போது முதல் பாகத்திற்கான வேலைகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கான டப்பிங், எடிட்டிங், இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி என இருவரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர். அடுத்து விக்ரம் மட்டும் தனது டப்பிங் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது. விக்ரமுக்கு அண்மையில் தான் கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தார் அதனால், அடுத்து விரைவில் பொன்னியின் செல்வன் டப்பிங் பணிகளை விக்ரமும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.