#BREAKING: வீடு திரும்பிய பொன்.ராதாகிருஷ்ணன்..!

பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

கடந்த மே 5-ஆம் தேதி மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்ட பொன்.ராதாகிருஷ்ணன்  மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தற்போது அவரது உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்திருந்தனர்.

author avatar
murugan