1980க்கு பிறகு தற்போது மீண்டும் பிரமாண்டமாக ‘அந்த’ தொகுதியை கைப்பற்றிய திமுக!

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுகவினரை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழத்தில் 37 தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் பெரிய வெற்றியும் பெற்றுள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக இதற்க்கு முன்னர் 1980ஆம் ஆண்டு தான் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு அதிமுக 6 முறையும்,மதிமுக 2 முறையும் காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளது.

39 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த மகேந்திரன் 5.5 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment