போலீசார் நடத்திய அதிரடி சோதனை…! சேலத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்…!

சேலத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள, 7,300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலம் அம்மாபேட்டை, புறவழிசாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது இரண்டு வாகனங்களில் வந்தவர்கள், போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அந்த வாகனத்தில் சோதனை நடத்திய போது, மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.1 கோடி மதிப்புள்ள, 7,300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்த வாகனத்தையும் போலீசாரை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும், இந்த குட்கா போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.