பிரதமர் மோடியின் புகழ் சரிந்து வருகிறது- முகுல்வாஸ்னிக்

  • உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
  • அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக்  ஜார்க்கண்ட் தேர்தல் முடிவின் மூலம் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்று கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக்  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தனர்.அவருடன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி வந்தனர். இதன் பின்னர்   முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜார்க்கண்ட் தேர்தல் முடிவின் மூலம் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. ஜார்கண்ட் தேர்தலில் பாஜக அரசை முற்றிலுமாக மக்கள் ஒதுக்கி உள்ளனர். பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருகிறது.

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மூலம் எதிரொலித்து இருக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.குடியுரிமை சட்டம் என்பது இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.