அனைவருக்கும் வீடு.! 150 நாடுகளுக்கு உதவி.! தூய்மை இந்தியா.! – பிரதமர் மோடி உரை.!

ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி காணொளி உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

அதில், 2022ம் ஆண்டிற்குள் அதாவது, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்குள் இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

மேலும், ‘கொரோனா பாதித்த 150 நாடுகளுக்கு இந்தியா உதவி புரிந்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவும் கூறினார்.

மேலும்,  ‘ ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடும் நெகிழி  பைகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.