துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவை பாராட்டி பேசிய பிரதமர் மோடி…!

வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும்,கம்பீரமும் இருக்கும் என பிரதமர் மோடி பாராட்டு.

நாளை மறுநாளுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை அடுத்து மாநிலங்களவையில் அவருக்கு பிரியா விடை நிகழ்வு நடைபெற்றது.

அப்போது பேசிய பிரதம நரேந்திர மோடி அவர்கள், வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும்,கம்பீரமும் இருக்கும்; அவரின் சாமர்த்தியத்திற்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

இளைஞர்களுக்கு உத்வேகமூட்டுவதாக உள்ளது வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை. சிறந்த தலைமை பண்பு மிக்கவர், பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர். அவருக்கு பிரியாவிடை அளிக்க நாம் இங்கு கூறியுள்ளோம். மிகவும் உணர்ச்சிமிக்க தருணமாக இது உள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment