ஒற்றுமை ஒளியை ஏற்றினார் பிரதமர் மோடி.!

நாடு முழுவதும் ஓற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் இன்று இரவு சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களது வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அவர்களது இல்ல வாசலில் டார்ச், மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி ஓற்றுமையை வெளிப்படுத்தினர். அதுபோல பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகளை ஏற்றினர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, சரியாக 9 மணி அளவில் 9 நிமிடங்கள் ஓற்றுமை ஒளியை ஏற்றினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்