பாதிப்புகளை பார்வையிட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி.!

அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று முன்தினம் கரையை கடக்க தொங்கியது. இதனால் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

மேலும், இந்த புயலால்  72 பேர் உயிரிழந்ததாக  அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். இதையடுத்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார். இதையடுத்து, பாதிப்புகளை பார்வையிட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி.

author avatar
Dinasuvadu desk