ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு .! முக்கிய அறிவிப்பை வெளியாகுமா..?

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டமாக அந்த திட்டங்களின் அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். நிதியமைச்சரின் அறிவிப்புகக்கு பின்னர் முதல் முறையாக  செய்தியாளர்களை  சந்திக்க உள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் இதற்கு முன்னர் 2 முறை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk