சென்னை பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 3 ஊழியர்கள் காயம்!

சென்னை தியாகராயநகர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் காயம்!

சென்னை தியாகராயநகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பெட்ரோல் சேமிப்பு கலனை மாற்றும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வேலூரில் இருந்து பெற்றுக் கொண்டு வந்து டேங்கில் நிரம்பும் போது திடீரென தீ எரித்ததாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த 3 ஊழியர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு தீக்காயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
Rebekal