10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டம்!

இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டம். கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப வேலையில் உள்ள சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய Amazon திட்டமிட்டுள்ளது. அதுவும், இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டமிட்டுள்ளது என இந்த விஷயத்தை அறிந்தவர்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமேசானின் சாதன அமைப்பு, மனிதவள பிரிவு, சில்லறை விற்பனை பிரிவுகளில் ஊழியர்களை நீக்க அமேசான் முடிவு செய்துள்ளது. மூலதன மதிப்பு … Read more

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் – கூகுள் எச்சரிக்கை!

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் … Read more

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் – கமல்ஹாசன்

ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பால் இந்நிறுவனத்தின் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர் என கமல் அறிக்கை. கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கானோர் வேலையிழந்திருக்கும் நிலையில், ஃபோர்டு நிறுவனம் தனது இந்தியத் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்திய தொழ்ற்சாலைகளில் தனது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதன் பல்லாயிரம் கணக்கான ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப் போதுமான கட்டமைப்பும், திட்டமும் இல்லாதது … Read more

செப்டம்பர் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர அனுமதியா? – விப்ரோ தலைமை அலுவலர் …!

செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர, அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை ஹெச்.ஆர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால்,தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர். எனினும்,தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்,குறைந்த பட்ச ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில்,செப்டம்பர் முதல் ஊழியர்களை படிப்படியாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை மனிதவள அலுவலர் … Read more

கொரோனா அச்சம்: ஹுண்டாய் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையின் ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால்,இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதனால்,காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும்,சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள  ஹுண்டாய் தொழிற்சாலை இந்த ஊரடங்கு காலத்திலும் இயங்கி … Read more

வீட்டிலிருந்து வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு – அமெரிக்க அரசு!

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக வீட்டில் இருந்தே முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அமெரிக்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுதும் குறையாமல் அமெரிக்காவில் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே முன்னெச்சரிக்கை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஜோ பைடன் அவர்களின் ஆட்சி தற்போது அமெரிக்காவில் நடந்து … Read more

டிக் டாக் நிரந்தர தடை…! ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் …!

டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது.  இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாக கூறி, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69-ஏ இன் கீழ் பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.  இதுகுறித்து, இந்திய அரசு கூறுகையில், மக்களின் தகவல்களை சீன நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது நிலையில், … Read more

2,200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் coca-cola நிறுவனம்!

coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர். பிரபல குளிர்பான நிறுவனமான coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர். கொரோனா தொற்று, காரணமாக குறைவான மக்களே  தியேட்டர்கள், பார்கள் மற்றும் மரங்கள் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.  இதனால் coca-cola விற்பனை மிகவும் … Read more

சென்னை பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 3 ஊழியர்கள் காயம்!

சென்னை தியாகராயநகர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் காயம்! சென்னை தியாகராயநகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பெட்ரோல் சேமிப்பு கலனை மாற்றும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வேலூரில் இருந்து பெற்றுக் கொண்டு வந்து டேங்கில் நிரம்பும் போது திடீரென தீ எரித்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 3 ஊழியர்களும் மருத்துவமனையில் … Read more

டாஸ்மாக் ஊழியர்கள் 450 பேர் திடீர் பணியிட மாற்றம்.!

தமிழகம் முழுவதும் நேற்று 2 மணிநேரம் மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 ஊழியர்கள் பணியிட மாற்றம். தமிழகம் முழுவதும் நேற்று 2 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட 450 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 25 டாஸ்மாக் பணியாளர்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 450 பேர் குடோன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலை நேரம் குறைப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நேற்று 2 மணிநேரம் டாஸ்மாக் கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்றது என்பது … Read more