இந்தியாவில் சர்வதேச விமானநிலையங்கள் திறக்க அனுமதி!

இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 கட்டங்களாக பொதுமுடக்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் தற்பொழுது சர்வதேச விமானநிலையங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், மூன்றாம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில், சினிமா ஹால், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும் என அறிவித்தது.

author avatar
Castro Murugan