விழுப்புரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.

விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதம் அடைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை சுற்றி இருந்த இரும்பு கூண்டை உடைத்து பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பெரியார் சிலையின் முகப் பகுதி சேதம் அடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

author avatar
murugan